மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.
மூக்கனூர்கோயில் மேடு கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர். மனுவின் விபரம் பின்வருமாறு;
தருமபுரி ஒன்றியம் மூக்கனூர்கோயில்மேடு கிராமத்தில் 100 க்ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் ஏழை மக்கள் வசித்துவருகிறோம் இந்த குடும்பங்களில் பலர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். எங்கள் கிராமத்திற்க்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை குறிப்பாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். குடிநீர் இல்லாமல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீருக்காக விவசாய கிணறுநோக்கி நடந்து சென்று எடுத்துவர வேண்டும்.
மேலும் தெருவிளக்கு இல்லை இரவு நேரங்களில் இருண்டு காணப்படுகிறது. கழிவுநீர்கால்வாய் இல்லை. இதனால் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் தெருவிலேயே ஓடும் நிலை உள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே எங்கள் கிராமத்திற்க்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
