தொப்பூர் கணவாயில் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.
விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் மலை பாதையில் ஏற்படும் விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்விஎஸ். செந்தில் குமார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து மத்திய கப்பல் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து ஒப்பந்த புள்ளி கோரியிருந்த்து. ஒப்பந்தபுள்ளி முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை
இன்று நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி
இன்று காணொளி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து தருமபுரி சுங்க சாவடி அருகே தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்விஎஸ். செந்தில்குமார் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி சாலை அமைக்கப்பட உள்ள பகுதியில் நேரடியாக சென்று அதிகாரியிடம் ஆய்வு நடத்தினார்.

தொப்பூர் கணவாய் சாலை இந்தியாவிலேயே பாதுகாப்பான சாலையாக மாறும்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்.
அதிகமாக விபத்து நடக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் முதல் முறையாக நான்கு வழி சாலை கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் பொழுது அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்திற்கு பிறகும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. விபத்து நடைபெறும் பகுதிக்கு நிரந்தர தீர்வு தேவை என்பதன் தொடர் முயற்சியாக மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் காணொளி காட்சிகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கியதன் காரணமாக நான்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அதில் புதியதாக அமைக்கப்படும் சாலை . புதியதாக மூன்று சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைக்கப்படும் சாலை தருமபுரியில் இருந்து சேலம் செல்வதற்கும். தற்போது உள்ள நான்கு வழி சாலை சேலத்தில் இருந்து தருமபுரி வருவதற்கான சாலையாக அமைக்கப்பட உள்ளது. உயர் மட்ட சாலை மற்றும் கீழ் மட்ட சாலைகள் ஆறு வழி சாலையில் இணைக்கப்படும். புதியதாக சாலை அமைக்க மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி கொடுத்ததால் இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக பணிகள் இன்று முதல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர சூழ்நிலை உள்ளது.
இன்று தொப்பூரில் அதற்கான துவக்க விழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளில் சாலை அமைப்பதில் சில மாறுபாடுகள் இருக்கும் மக்கள் புதிய பயன்பாட்டு வருவதற்குள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும். சாலை அமைக்கப்பட்டால் இந்தியாவிலேயே பாதுகாப்பான சாலை என்ற இலக்கை அடையும். மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் அமைச்சர் நிதின் கட்கரிக்கும் . தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன். போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
