அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை
தமிழ்நாடு முதலமைச்சர் மார்ச்- 11 திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அ உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளி பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் தருமபுரி அரசு விழாவில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னதாக, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி நகர்மன்ற தலைவர் இலட்சுமி நாட்டான் மாது உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

