வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.
அரூரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு யாசட் சங்க தலைவர் க.வசந்த் தலைமை வகித்தார். சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில துணை செயலாளர் அ.வடிவேலன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கலந்து கொண்டு்
வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய விளக்கவுரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் , வழக்கறிஞர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள், விரைந்து தீர்வுகாண மாவட்டம் தோறும் தனி வழக்காடு மன்றம் கொண்டு வர வேண்டும்
கல்லூரிகள் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக கொண்டு வந்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குவதுடன் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
சாதி ஒழிப்பு குறித்து அனைத்து தரப்பு மக்களும் விழிப்படையும் வகையில் அனைத்து சமூக மகக்கள் அடங்கிய சனநாயக சமூக விழிப்புணர்வு குழுக்கள் உருவாக்கி கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பஞ்சமி நிலங்கள் மீட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக யாசட் சங்க அலுவலக செயலாளர் வழக்கறிஞர் அ.ராகுல்சித்தார்த் நன்றி கூறினார் .

