புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த கணக்கெடுப்பு பணி.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்காக இப்போஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநனரகம் நியமித்துள்ளது.
இந்த நிறுவனம் துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை எடுத்துச்செல்ல ஆதரவு கேட்டுக்கொண்டனர்.
கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தும் மேலும் அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யும்.
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி கள ஆய்வு மூலம் மேற்கொள்ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ள துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும்.
IPSOS Research Private Limited Branch Office:
Registered Office New No.150, Old No. 24 & 25
Lotus Corporate Park Nelson Manikam Road
1701, 17th floor, F wing, RWD Atlantis, 3rd floor, Aminjikarai,,
Off Western Express Highway Chennai-600029. India.
Goregaon East, Mumbai-400063 Phone No. +91 44 49016060
India.
Tel.No.+91 226620 8000
CIN: U74130MH2004PTC1469041 Email: ipsos.india@ipsos.com / Website : www.ipsos.com/en-in
இவ்வாறு தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

