புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
புதுவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, நகர செயலாளர் நிர்மலா ராணி,ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஒன்றிய செயலாளர் எம்.மீணாட்சி, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, மீனாட்சி, ரங்கநாயகி, சுசீலா உஷா ,கற்பகம், இளவரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
சிறுமி பாலியல் பாலாத்காரத்துக்கு காரணமான போதை பொருளை ஒழிக்கவேண்டும்.பொதை பொருளை பழக்கத்திற்க்கு காரணமான பிஜேபி கூட்டணி புதுச்சேரி முதல்வர் ரஜினாமா செய்யவேண்டும்.பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

