தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி உடன்படிக்கையில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவர்களும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின்போது, கழகப் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பேச்சுவார்த்தை குழு ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்களும் புதுச்சேரியில் 1 இடம் என மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


