இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்
இந்துசமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகம் ,வணிக வளாகம் கட்டும் பணியை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் புதியதாக தருமபுரியில் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, மற்றும் தருமபுரி குமாரசாமி பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின்
புதியதாக ரூ 1.14 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியை காணொளிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து தருமபுரியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது, அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் உதயகுமார்,
திமுக நகரசெயலாளர் நாட்டான் மாது, நகர துணை செயலாளர் வ.முல்லைவேந்தன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கெளதம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மே.அன்பழகன், துரை, மலா, செயல் அலுவலர்கள் முருகன், சிவானந்தம், ராஜகோபால், ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
