உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மை தருமபுரி என்ஜிஒ அமைப்பின் சார்பில் தகடூர் தங்கத் தாரகை -2024 விருது வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சி.கே.எம்,குரூப்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குநரும், மை தருமபுரி என்ஜிஒ, கெளரவத் தலைவருமான டாக்டர் சி.கே.எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மை தருமபுரி என்ஜிஒ நிறுவனர் சதீஷ்குமார் ராஜா வரவேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில்:

தருமபுரி மாவட்டம் குழந்தை திருமணத்திலும், குழந்தை கருத்தரிப்பிலும், முதல் மாவட்டமாக உள்ளது. பெண்குழந்தைகளை உயர்கல்வி வரை நன்றாக படிக்க வைக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், முன்னேறிய மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார். மேலும் அனைவரும் வரும் தேர்தலில் வாக்களிப்பது முக்கிய கடமையாக கருதி ஜனநாயக கடமையாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அனைவரும் வாக்களிப்போம், என மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்விழாவில், சாதித்த மங்கையருக்கு, தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கப்பட்டது. தீபா சில்க்ஸ் சத்யா தியாகராஜன், ஸ்ரீ ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், கலாவதி, செந்தில் குமார் கிளாசிக் பேக்கரி கார்த்திக்குமார், செல்வமாளிகை ஜீவல்லர்ஸ் ராஜசேகரன், பிஎஸ்சி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்,பி.சுரேஷ்குமார்,கவுண்டர் கார்ப்பரேசன் ஸ்ரீகாந்த், வள்ளி ஆர்த்தோகேர், விஜியலஷ்மி, ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆசிரியர் வ.செளந்திரபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மை தருமபுரி என்ஜிஒ செயலாளர் ப.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


