பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் 34 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமானி மல்லாபுரம் அருகே எம்.ஜி.ஆர் நகரில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உப்பாரஅள்ளி முனியப்பன் கோயிலுக்கு சிமென்ட சாலை அமைத்தல், கீழ் பட்டாளம்மன் கோயிலில் 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயகழிவறை கட்டுதல், 9 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொட்டபாவளி கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைத்து பைப் லைன் வழங்குதல், 12 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டகானம்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்தல் ஆகிய பணிகளை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மல்லாபுரம் சதிஷ், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகி அசோக், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி உள்ளிட் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

