பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தல்.
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட கண்வினர் சி.கவிதா தலைமை வகித்தார். உழைக்கும் பெண்கள் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.தேவமணி, சிஐடியு, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள், ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன் மாவட்ட செயலாளர் பி.ஜீவா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நகராட்சி மற்றும் பேரூராட்சி கழிவறைகளில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும்.
பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். குழுவின் பரிந்துரைகளை கறாராக செயல்படுத்தவேண்டும்.
அவ சம வேலைக்கு சம ஊதிய சட்டத்தை கறாராக அமுல்படுத்தவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி மருத்துவம், ஆஷா பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இயற்றவேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, 200 நாட்களாக அதிகப்படுத்தி, தினக்கூலி ரூ. 600/- வழங்க வேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தனியார் நிறுவனங்களில் ஓய்வின் போது பெண்கள் நின்று கொண்டுருப்பதை தவிர்க்க இருக்கையை உறுதி செய்யவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கருத்தரங்கில் வலியுறுத்தினர்.

