பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் கிராம சாலைகள் மற்றும் மலைச்சாலைகள் உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாமகவை சார்ந்த தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
உண்ணாவிரதம் இருக்க போலிசார் அனுமதி மறுத்ததை அடுத்து தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கு மேற்பட்ட பாமக நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து உண்ணாவிரத இடத்திற்கு வந்த தருமபுரி வருவாய்கோட்டாச்சியர் காயத்திரி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ வெங்க டேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் எம்எல்ஏ குறிப்பிட்ட தம்மம்பட்டி பஞ்சாயத்து சோளிங்கர் முதல் மலைக்காடு வரையிலான ஆறு கிலோமீட்டர் சாலையில் மிகவும் சேதம் அடைந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு செய்யவும் மற்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இது குறித்து பேசிய தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் பொதுமக்களுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் அவர்களுக்கு பதிலாக நானே போராடுகிறேன். பொதுமக்களின் கோரிக்கை குறித்து சட்டமன்றத்திலும் தொடர்புடைய துறை சார்ந்த செயலாளர்களிடம் நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் சாலை பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார்.
உண்ணாவிரத போராட்டத்திற்க்கு ஆதரவாக நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் நம்பிராஜன், பெரியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் சிலம்பரசன் , அறிவு, முருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
