பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் ,மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ,ஆர்.மல்லிகா,ஆகியோர் பேசினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில்:
ஆண்களுக்கு சமமான கூலி பெண்களுக்கு வழங்கவேண்டும்.என 1908 ம் ஆண்டு, அமெரிக்காவில் பல ஆயிரம் பெண்கள் திரண்டு போராடினர்.பின்னர் 1910 ம் ஆண்டு சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் 18 நாடுகளில் இருந்து 117 பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துரைத்தனர்.மார்ச் 8 ல் நடத்திய போராட்டத்தின் விளைவாக சர்வதேச தினமாக அறிவிக்கவேண்டும் என இந்த மாநாட்டில் முன்மொழியப்பட்டது.அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 பெண்கள் போராடினர்.பின்னர் 1975 ம் ஆண்டு ஐநா சர்வே தேச பெண்கள் தினத்தை அங்கிகரித்து மகளிர் தினவிழா நடைபெற்றுவருகிறது. உலகத்தில் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளை விட இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இந்தியாவில் மனு ஸ்மிருதி சட்டம் 3000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு இந்தியாவில் பெண்களை இரண்டாம்தரமாக பார்க்கின்றனர்.மனுஸ்மிருதியில் ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும். பெண்கள் மோகம்கொண்டவள்,வஞ்சகமானவள், என்று மோசமாக வர்ணிகப்பட்டுள்ளது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற, உரிமைகளை பறிக்கின்ற மனுஸ்மிருயை ஏற்று செயல்படுவது ஆர்எஸ்எஸ், இதை அமல்படுத்துவது பிஜேபி, இதை வழிநடத்துபவர் பிரதமர் மோடி,சாதனத்தை கடைபிடிக்கிற பிஜேபி தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தை கடைபிடிக்கிறார்.இந்த சனாதன அரசை தோற்க்கடிக்கவேண்டும் இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும். இதற்கு பிஜேபி வகுப்புவாத மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என பேசினார்.

