பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
பதவிஉயர்வுவழங்கப்பட்டவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்ககோரி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளநிலை ஆய்வாளரிலிருந்து, முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு, பணிபுரியும் மணடலத்திலேயே பணி அமர்வு ஆணை வழங்க வேண்டும் ,என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சி.குமார் தலைமை வகித்தார்.
மாநிலத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் பாக்கியவதி ,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ,ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ,வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.ஜெயவேல் ,மற்றும் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
