தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், “நாடும் நாமும்” என்ற தலைப்பில், கருத்தரங்கம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.பெருமாள் வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர்கள் பி.மோகன்ராஜ்,எம்.காரத்திகேயன்,எஸ்.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் டி.குப்பன் சிறபபுறையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் கே.கேசவன் மாவட்ட இணைசெயலாளர்கள் எம்.கோபால்,கே.சின்னராசு , ஆகியோர் பேசினர்.
போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்க மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் டி.பாஸ்கரன், ,மின்வாரிய ஓய்வுபெற்றார் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்று 70 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். சத்துணவு அங்கன்வாடியில், பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு, ஓய்வூதியமாக ரூ 7850 வழங்கவேண்டும். உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை , நிறைவேற்றுகிற கட்சிகளை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாவட்ட இணைச்செயலாளர் இ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

