குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி வந்ததிகளை நம்பவேண்டாம்:
காவல்து றை எச்சரிக்கை.
குழந்தைகளை கடத்த முயறிச்சிப்பது போன்ற பொய்யான காணொலி வதந்திகளை நம்ப வேண்டாம் சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்று பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் காவல்துறை உதவி எண் 100- ஐ அழைக்கலாம்.
மேலும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம்.
மேலும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

