இலவச மனைப்பட்டா வழங்க கோரி, பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.
அரூர் வட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், பட்டை நாமம் போட்டு, நூதன முறையில், அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செல்லம்பட்டி பஞ்சாயத்து, கீளானூர் கிராமத்தில் கல்லாங்குத்தல் புறம்போக்கு நிலம் சர்வே எண் 65/2-ல் உள்ள நிலத்தினை வகை மாற்றம் செய்து, மனை பட்ட இல்லாத கீளானூர் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மத்தியம்பட்டி பஞ்சாயத்து, வேடியப்பன் கோவில் சர்வே நம்பர் 154/1 வீடு கட்டி குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும்.
சிட்லிங் பஞ்சாயத்து, கத்திரிப்பட்டி, நாட்டான்வளவு, நடுவலவு, கம்மாளை ஆகிய கிராமங்களில் நூறு ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் பழங்குடியின மக்களு மக்களுக்கு மனை பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும்.
வேடகட்டமடுவு பஞ்சாயத்து, டி.ஆண்டியூர் கிராம சர்வே எண் 29/6 அரசு புறம்போக்கு நிலத்தில் மேல்செங்கப்பாடி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு மனைபட்டாவும், அரசு புறம்போக்கு நிலம் 62/1-ல் மேல் செங்கப்பாடி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு நிலப் பட்டா வழங்கவேண்டும். எல்லைப்புடையாம்பட்டி பஞ்சாயத்து, கெளாப்பாறையில் சர்வே எண் 80-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். எம்.வெளாம்பட்டி பஞ்சாயத்து, காந்திநகர் குட்டப்பட்டியில் மனைபட்டா வழங்கிய நிலத்தினை அளந்து கொடுக்கவேண்டும்.
எச்.தொட்டம்பட்டி பஞ்சாயத்து பச்சினம்பட்டியில் மனை பட்டா இல்லாத மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும்.
போளையம்பள்ளி பஞ்சாயத்து, ஜடையம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே நம்பர் 396, 397, 412, உள்ள நிலத்தில் ஜடையம்பட்டி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை அளந்து அத்துக்காட்ட வேண்டும் மாம்பட்டி பஞ்சாயத்து இட்லப்பட்டி கிராமத்தில் 15/1-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.முத்து மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி மாவட்ட பொருளாளர் சிவா ,ஒன்றிய தலைவர் ஜடையாண்டி நிர்வாகிகள் சி.வேலாயுதம் , சொக்கலிங்கம்,வீரப்பன் தங்கராஜ் ,ராமன் , இந்திராகாந்தி ஆகியோர் பேசினர்.

