தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 88 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 88 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 43 மனுக்கள் பெறப்பட்டது .இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்களான இளங்கோவன் பாலசுப்பிரமணியன் காவல் துணை கண்காணிப்பாளர்களான செல்வி சிந்து , சிவராமன் , தேவராஜன் காவல் ஆய்வாளர்கள் ,சுப்பிரமணி , பாலகிருஷ்ணன் ,அன்பழகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

