சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி, உள்ளாட்சியில், பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,டேங்க் ஆப்ரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டவாறு சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும். காலமுறை ஊதியம் , ஓய்வூதியம், பணிகொடை வழங்கவேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான, குறைந்தபட்ச ஊதியம்வழங்கவேண்டும்.
ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, காலம்தாழ்த்தாமல் மாத முதல் தேதியில் ஊதியம்வழங்க வேண்டும். உள்ளாட்சி பேரூராட்சி பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு (SR Book) பணி பதிவேடு,போர்கால அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.தொழிலாளர்களை பணி பளுவில் இருந்து மீட்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள 7-வது ஊதிய குழுந்துரைப்படி நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. அந்த தொகையை உடனே வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கவன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் என்.மனோகரன் தலைமை வகித்தார்.
சம்மேளன மாநிலத்தலைவர் ஆர்.ஆறுமுகம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வன் , ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் கே.மணி,சங்க மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜே.பிரதாபன், இந்திய கம்யூஸட் கட்சி மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.சுதர்சனம்,ஏ.முருகேசன் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி, ஆகியோர் வாழ்த்திபேசினர்.
