போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்
தருமபுரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தருமபுரி மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் ஒகேனக்கல் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

மத்திய சங்க தலைவர் ஜே.மாது தலைமை வகித்தார்.மத்திய சங்க பொதுச்செயலாளர் தி.வீரமகேந்திரன் வரவேற்றார்.
சங்க ஒருங்கிணைப்பாளர் மா.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

பேரவை செயல் தலைவர் பொன்.கோவி.பரமசிவம்,பேரவை பொதுச்செயலாளர் வீ.அண்ணாதுரை பேரவை தலைமை நிலைய செயலாளர் கோ.கெளதமன் மத்திய சங்க பொருளாளர் ச.செந்நில்குமார் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள் தி.ரவி,பி.ஜி.சங்கர்,சி.வெங்கட்டேசன் ஆகியோர் பேசினர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் 1972 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல், தொழிலாளர்களையும் நிர்வாகத்தையும் அரசாக மாற்றி ஊழியர்களை அரசு ஊழியராக்கவேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 14- ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ 3000 வழங்கவேண்டும்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்கவேண்டும்.வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியடைய செய்வது, ,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
கழகத்தில் பணியாற்றி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, வாரிசு வேலை வழங்கிய, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ அரசு மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

