மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
திமுக கிழக்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி. செல்வராஜ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ சுப்ரமணி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், நகர கழக செயலாளர் நாட்டான் மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், சரஸ்வதி துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் கே.எஸ்.ஆர்.சேட்டு, ஏ.எஸ். சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து, மற்றும் சார்பு அணி மாவட்ட தலைவர்கள் – துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கெளதம் நன்றி கூறினார்.
வருகின்ற மார்ச் 11 திங்கட்கிழமையன்று தருமபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சி, மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
