நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரையினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைத்தார்கள்.

மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகவும், தருமபுரி மாவட்ட பொதுமக்களிடையே நெகிழி (பிளாஸ்டிக்) தடை போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தும் பொருட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரையினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:
பொதுமக்கள் நெகிழிப் பைகளைத் தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிறுத்தியதோடு, நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதிலும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுலவக கூட்டரங்கில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்யலட்சுமி, உதவிப்பொறியாளர் பா.லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவர்கள், உதவி பேராசிரியர்/நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பரமேஸ்வரன், அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

