போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமி விளையாட சென்ற போது அவரது வீட்டு அருகே இருந்த முருகேசன் (48) என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமி அந்த வீட்டிலிருந்து பதட்டமாகவும் சோர்வாகவும் வெளியே வருவதை பார்த்த அவரது தாயார் விசாரித்தபோது முருகேசன் வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஏரியூர் போலிசார் போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணை முடிந்து முருகேசன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

