சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக்க கோரி, தருமபுரி அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி கடந்த பிப்- 28- முதல் ஏழு நாட்களாக சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து தருமபுரி அரசு சட்டக் கல்லூரி முன்பு சட்டக் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தே. கோவிந்தராஜ், கே. கோபு,ஜேம்ஸ், சங்கர், கிருத்திகா, ஹரிணி வெங்கடேஷ்,ஜே அஜய் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

