மார்ச் 8 ல் அதிமுக மாகளிரணியின் மகளிர் தின விழா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற மார்ச் 8. வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்த நிகழ்ச்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
மகளிர் அணியின் சார்பில் நடைபெற உள்ள சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கழக மகளிர் அணியில் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், செயல் வீராங்கனைகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டுமென அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

