நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.
அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்துத்து, தாக்கிய ரவுடி முருகானந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டம். பெரியகோட்டை கிராமத்தில் நல அளவர், நவ்யா நில அளவை பணி மேற்கொண்டார். அப்போது இவரை முருகானந்தம் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையான தாக்கியுள்ளார்.
பணியின் போது ரவுடித்தனமாக நடந்துகொண்ட ரவுடி முருகானந்தனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கி.வெங்கட்டேசன் தலைமை வகித்தார்.மாநிலசெயலாளர் ரா.கல்பனா ,
மாவட்ட செயலாளர் சி.பிரபு,மாவட்ட பொருளாளர் மா.முருகன் , மாவட்ட இணைச்செயலாளர் க.தவமுணி,மாவட்ட துணைத்தலைவர் த.இராமமூர்த்தி ,அரூர் கோட்ட தலைவர் ரா.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க,மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், வட்ட செயலாளர்கள் ஸ்ரீநாத்,தேவகி, தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் , ஆகியோர்வாழ்த்தி பேசினார்.

