தருமபுரி போலியோ சொட்டு மருந்து முகாம்
தருமபுரி புறநகர பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் தருமபுரி மாவட்டம் முழுவதும் மார்ச்3 இன்று நடைபெறுகிறது.பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கி முகாமினை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்றத் தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, துணை இயக்குனர் சுகாதாரம் மரு ஜெயந்தி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்.
