காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம்
காரிமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இளம் பெண் படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்கை்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேவுள்ள சவுளுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மனைவி ஜெயஸ்ரீ (20) இவர்
வீட்டருகே விடியற்காலை நேரத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தோட்டத்திற்குச்சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கியிளளது.இதில் காயமடைந்த ஜெய்ஸ்ரீயை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் வனப்பகுதிகள் வறண்டு வரும் நிலையில், உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியே வந்திருக்கிறது ஒற்றை காட்டு யானை, கடந்தாண்டும் இது போன்ற யானை தாக்குதல்கள் நடைபெற்றது.
ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தால் கிராம மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒற்றை காட்டு யானை தாக்கயதில் இளம்பெண் காயமடைந்த சம்பவம் பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிள்ளது.

