தருமபுரி மார்ச்-5 ல். வனத்துறை நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
தருமபுரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வனத்துறை சார்ந்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு,கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு.மாவட்ட வன அலுவலர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

