தலித் மாணவரை சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
உத்தரபிரதேசத்தில், தலித் மாணவரை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி, பிரிவினர், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கண்டனஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமைவகித்தார்.மாநிலதுணைத்தலைவர் திருமுருகன் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச்செயலாளர்கள், இராமசுந்திரம்,வீரமுனிராஜ், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர், மோகன்,மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல்,மாவட்ட இளைஞர் அணி தலைவர் கலைச்செல்வன்,மாவட்ட துணைத்தலைவர் கலைவாணன்,மாவட்டசெயலாளர் தமிழ்வாணன்,மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் தருமபுரி தொகுதி தலைவர் யுவராஜ், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தலைவர் முத்து,அரூர் தொகுதிதலைவர் தேவராஜ், பென்னாகரம் தொகுதி தலைவர் அன்புகுமார், பாலக்கோடு தொகுதி தலைவர் சங்கீதா, நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தலித்மாணவர் சோமேஷ் படுகொலையில், நீதிவேண்டும்.சோமேஷ் குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.தலித்மாணவரை சுட்டுக்கொன்ற காவல்துறை மீது வழக்குபதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

