முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தருமபுரி நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழாக்களுக்கு நகர செயலாளர் நாட்டான் மாது தலைமை வகித்தார்.
தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் கேக்வெட்டி முதல்வர் பிறந்தநாளை கொண்டாடினார்.
தருமபுரி எஸ்வி,சாலையில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர அவைத் தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி ரவி, நகர பொருளாளர் சம்பந்தம், மாவட்ட பிரதிநிதிகள் சுருளிராஜன், கனகராஜ், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், ஹரி விக்னேஷ், குமார், ராஜா, ரவி, வெல்டிங் ராஜா, சக்திவேல், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், புவனேஸ்வரன், பாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
