அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.
இலக்கியம்பட்டி ஊராட்சி அண்ணாநகர்,வெண்ணாபட்டியில் தலா ரூ 10 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

தருமபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி அண்ணா நகர், மற்றும் வெண்ணாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து இனிப்பு வழங்கினார்.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கியம்பட்டி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், பா.ம.க. மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் யுவராஜ், கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, திருமூர்த்தி, ராமஜெயம், செந்தில், ரவி, சங்கீதா, சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தீயணைப்புத் துறையினர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

