மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் சார்பில் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் ஏ.அருள்நாதன் தலைமை வகித்தார்.
.கோட்டசெயலாளர் பாண்டியன் வரவேற்றார்.திட்டசெயலாளர் எஸ்.கோகுல்தாஸ், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.பி.புகேழந்தி வாழ்த்தி பேசினார்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 56000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.45000 தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.அலுவலகத்தில் பணிபுரியும் 1000 கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சரன்விடுப்பு வழங்கவேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சுமார் 1000 கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள பணிசெய்து உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.திட்ட பொருளாளர் சி.அழகேசன் நன்றி கூறினார்.

