தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமகம் தேரோட்டத் திருவிழா நடைபெறுவதையொட்டி, மார்ச் 1.ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
ஆனால், அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 16 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

