குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டபட்ட பூதிப்பட்டி கிராமத்தில்100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வருடமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் சீரான குடிநீர் வழங்க கோரி பூதிப்பட்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் பென்னாகரம் வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உடனடியாக பூதிப்பட்டி கிராமத்துக்கு சென்று அந்தப் பகுதியை பார்வையிட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதனால் பொதுமக்கள் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்

