சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர்,தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கழக தேர்தல் வாக்குறுதி எண்-311 ல் கூறியபடி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சமஊதியம் வழங்க 3 நபர் ஊதிய குழு அமைத்து அரசாணை எண் : -25 நாள் 30.01.2023 வெளியிட்டதற்கு இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த மூன்று நபர்கள் அடங்கிய குழுவில் எங்களது இயக்கத்தின் சார்பாக 10.03.2023 அன்று நேரில் சந்தித்து இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் 110 பக்கம் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம். அதனை ஏற்று மூன்று நபர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று 13 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினைகளை களைந்து ,தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 5200 என்றும் “ஒரே பணி- “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்கவில்லை.எனவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், சம வேலைக்கு -சம ஊதியம் வழங்க வேண்டும்.

2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஒய்வு பெற்று வருகிறார்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூம.தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் பெ.பழனிச்சாமி,முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பொ.சசிக்குமார்,சிறப்புரையாற்றினார்.
மாவட்ட துணைசெயலாளர்கள் து.ரஞ்சித், த.ராஜிவ்காந்தி,மாவட்ட துணைத்தலைவர்கள் செ.நாகராஜன்,இரா.சத்தியமூத்தி, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சி.சிவமலர், அணிதா ஆகியோர் பேசினர்.

