அரூர் பேரூராட்சியில் திமுகவினர் வீடுவீடாக தின்னை பிரச்சாரம்
அரூர் பேரூராட்சியில், திமுகவினர் வீடுவீடாக தின்னை பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர், கோவிந்தசாமி நகர், நான்குரோடு உள்ளிட்ட பகுதிகளில் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி தலைமையில் திமுகவினர் தீவிர தின்னை பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதில் இல்லந்தோறும் ஸ்டாலின்குரல் துண்டறிக்கை வழங்கி,திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கைகள் குறித்து தின்னை பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் எடுத்து கூறினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழி, பேரூர் கழக துணை செயலாளர்கள் செல்வதயாளன்,
விண்ணரசன், பொருலாளர் மோகன் ,மாவட்ட
பிரதிநிதி மதியழகன், இஸ்மாயில், நெப்பொலியன், பிரேம்தாஸ் உள்படபலர் கலந்து கொண்டனர்.

