சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.
அரூர் மேற்கு ஒன்றியம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு சின்னாங்குப்பம் பகுதிகளில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கையை திமுகவினர் வழங்கினர்.
அரூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோபிநாகம்பட்டி கூட்ரோடு சின்னாங்குப்பம்பகுதிகளில், ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு தலைமையில், இல்லந்தோறும் ஸ்டாலின்குரல் துண்டறிக்கை வழங்கி, பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பி.வி.சேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் சி.தென்னரசு,வர்த்தகரணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, கே.வி.சுதாகர், சத்தியமூர்த்தி, கோவிந்தன், செல்வம், தினேஷ், முரளிதரன், வேடியப்பன், ராமராஜ், கிளி பிரபு ,தமிழ்செல்வன், அண்ணாதுரை, மாரியப்பன், குமரவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

