தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29. அன்று வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

