சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.
சோலைகொட்டாய் கிராமத்தை அச்சுறுத்தும் வனத்துறை ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சோலைகொட்டாய் கிராமத்தில் சுமார் நூறு குடும்பகள் உள்ளன. நாங்கள் அனைவரும் ஏழை.எங்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலிவேலை செய்தும் ,கறவைமாடுவைத்து, பால் ஊற்றி அதில் வரும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிவன்,ராஜி, முத்துசாமி,தங்கவேல் ஆகியோர் மீது மான்கறி வைத்திருந்ததாக கூறி மொரப்பூர் வனசரக அலுவலர்கள் மேற்கண்டவர்களை அடித்து துன்புறுத்துகிறார்.பொய்யான முறையில் அபராதம் விதிக்கிறார்.எங்கள் கிராமத்திற்கு வந்து பெண்களை மிரட்டுகிறார்.இரவுநேரங்களில் பெண்களை புகைப்படம் எடுக்கிறார்.300 வனத்துறையினரை இறக்கி வாச்சாத்தி கிராமம் போன்று சம்பவம் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்.
எனவே எங்கள் கிராம பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே வனத்துறையினர், அச்சுறுத்தலில் இருந்து எங்களை பாதுக்காகவேண்டும்.பொய்வழக்கு ,வீன் அபராதம் விதிப்பதை, கைவிடவேண்டும்.மிரட்டும் வன அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

