தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் திட்டத்தின் மூலமாக தருமபுரியில் இயங்கும் அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மொத்தம் 80 மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே பயிற்சி காவல்துறை மூலமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளை வலிமையாகவும் தைரியமிக்க பெண்ணாக உருவாக்கவும் இந்த கராத்தே பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதனை முதற்கட்டமாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் இன்று துவக்கி வைத்தார்.

இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆன இளங்கோவன் காவல்துறை கண்காணிப்பாளர்நாகலிங்கம் சிவராமன் காவல் ஆய்வாளர் வேலு தேவன் மற்றும் கல்வி முதன்மை அலுவலர் ஜோதிசந்திரா ,காரத்தே மாஸ்டர் நடராஜன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

