தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம்
தமிழ்நாடு வனத்துறை தீர்த்தமலை வனச்சரகம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துதுறை, இணைந்து தீர்த்தமலை சூழல் மேம்பாட்டு குழு வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலர் கே.பெரியண்ணன் தலைமை வகித்தார் இம்முகாமில் 67 நபர்களுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பொதுமருத்துவம் மக்களை தேடி மருத்துவ குழு மூலம், ரத்தஅழுத்தம் சர்க்கரைநோய் கண்டறிந்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பத்து நபர்களுக்கு கண்புரைக்காக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில், மருத்துவர்கள் ஏ.இசைத்தமிழ் எஸ்.பாலாஜி, மக்களை தேடி மருத்துவர் ஆர்.சந்தியா,கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன், ஆய்வுகூட நுட்பநர் தமிழரசன், செவிலியர் கயல்விழி, ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை வன காப்பாளர்கள் என்.ஜீவானந்தம், கே.சுரேஷ், ஜெயலட்சுமி, கல்பனா, சிற்றரசன், செந்தில்குமார், ஆகியோர் செய்திருந்தனர்.
