முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் திங்கட்கிழமை அன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சி தலைவர்கள் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சி, கே.வி. தங்கபாலு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே. பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின்,சேகர் பாபு,நேரு, பங்கேற்றனர்.

சென்னை கடற்கரையில் அண்ணா நினைவிடத்தைக் கடந்து, கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி அமா்ந்த நிலையில் எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையைக் கடந்து சென்றால், எதிரே கருணாநிதி சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘கலைஞா் உலகம்’ எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறை அமைக்கப்பட்டு, அதில் இளமைக் காலம் முதல் கருணாநிதியின் வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள், சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடா்பான புகைப்படங்களின் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் என்றாலே போராட்டம்தான்! அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காணொலி உரை ஒளிபரப்பப்பட்டது.

