மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேஸ்திரி தமிழ்வாணன் (50). இவர் தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் மேல் மாடியில் மேஸ்திரி வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சார கம்பியில் இரும்பு மாட்டி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் தமிழ்வாணனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு அழைத்துசென்றனர். மருத்துவர்கள் சோதனை செய்ததில் தமிழ்வாணன் உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து பாலக்கோடு போலிஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், எஸ்எஸ்ஐ சரவணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

