இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமையன்று தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ், தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி,சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் டாக்டர் ஏ.கே.தருண் ஆகியோர்சிறப்புறையாற்றினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தாமரைசெலவன், பொதுக்குழு உறுப்பினர்கள்கள் எம்.ஜி.சேகர்,நட்ராஜ், தர்மசெல்வன்,மாவட்ட பொருளாளர் தங்கமணி , தருமபுரி நகர செயலாளர் நாட்டான்மாது, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம்,உமாசங்கர்,ரேணுகாதேவி ,இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கட்டேஸ்வரன்,மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் சிறப்பாக செய்வது,தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா,சிறப்பாக கொண்டாடுவது,மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, நாடாளுமன்ற தேர்தல் பணியை சிறப்பாக செய்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
