தொப்பூரில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் காவலர் குடியிருப்பை விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற வலியுறுத்தல்.
தொப்பூரில் பல ஆண்டுகளாக பயன்இல்லாமல் பூட்டி கிடக்கும் காவலர்கள் குடியிருப்பை, விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கடந்த 2001 ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில், 1 கோடி மதிப்பில் இன்ஸ்பெக்டருக்கு தனி வீடு உட்பட, 27 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.இந்த குடியிருப்பை, 2001 ல் திறக்கபட்டது.
புதியதாக கட்டப்பட்ட பிறகு, 10 ஆண்டுகள் இக்கொடிய இருப்பில் போலீசார் கும்பத்தினருடன் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பில் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி குடிநீர் பிரச்சனை காரணமாகவும், அங்குள்ள காவலர்களின் குழந்தைகள் படிக்க அருகில் பள்ளிகள் இல்லாததாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். மேலும் காவலர் குடியிருப்பு முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவற்றின் அருகிலேயே தொப்பூர் கணவாய் இரட்டைபாலம் பகுதியில் தொடர்ந்து வருடம் முழுவதும் இரவு பகல் இரு வேளைகளிலும் சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுவதாலும் அங்கு குடியிருக்கும் போலீசார் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
குடியிருப்பு அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டுபன்றிகள், குரங்குளின் தொல்லையால் காவலர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தொப்பூர், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் குடியேறினர். யாரும் தங்காத நிலையில் போலீசாருக்கு கட்டப்பட்ட அந்த குடியிருப்பு பராமரிப்பு இல்லாமல் அந்தப் பகுதி முழுவதும் புதர் மண்டி காடு போல் காட்சியளித்தது.
காவலர் குடியிருப்பு வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அப்பதிக்கு தங்குவதற்க்கு முன் வரவில்லை.
இதுகுறித்து
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கூறுகையில்:

போலீசருக்காக கட்டுப்பட்டு குடியிருப்பு பயன்படுத்தாமல் வீணடிப்பதை சீரமைக்க கோரிக்கை வைத்தேன் அதன் அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் போலீசார் தங்க முன்வராத பட்சத்தில் அவற்றை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இங்கு ஏற்படும் விபத்தில் சிக்கிகொள்பவர்களை மீட்டு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலே பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பதற்கே பல மணி நேரங்கள் ஆகுவதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத நிலையிலேயே பலரும் உயிரிழக்கின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாழடைந்து பூட்டியே கிடக்கும் இந்த கட்டிடத்தை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமாக மாற்றினால் விபத்தில் சிக்குபவர்களை ஐந்தே நிமிடங்களில் உடனடியாக அவசர சிகிச்சை அளித்து உயிர் இழப்பை தடுக்கலாம்.இந்த வளாகம் அவசர சிகிச்சை மையமாக அமைக்கப்படும் போது கூடுதல் படுக்கை அறைகளையும் அமைக்க முடியும்,என தெரிவித்தார்.

