தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்
அரூரை அடுத்த தீர்த்தமலையில் திங்கள்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமகதேர்திருவிழாவினையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் வனத்துறையினர் சார்பில்,
அரூரை அடுத்த தீர்த்தமலையில், வனச்சரகர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்.26) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
காலை 9 மணியளவில் தொடங்கும் இந்த முகாமில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கண்புரை உள்ளவர்களுக்கு இலவசமாக விழிலென்ஸ் (ஐ.ஓ.எல்) பொருத்தப்படும். கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பயனாளிகளுக்கு உணவு, போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும். எனவே, தீர்த்தமலை தேர் திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்கள், தீர்த்தமலை சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தீர்த்தமலை வனச்சரகர் கே.பெரியண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

