பரிகம் வனப்பகுதியில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு: ரூ 5,55,000 அபராதம்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டம், தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் பிரிவு, பரிகம் காப்புக்காடு, பரிகம் வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சராகத்தில் கடந்த பிப்- 4.ஆம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த துரை 45, என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் துரை என்பருக்கு இரண்டு முறை காரணம் கேட்கும் அழைப்பானை வழங்கி துரையை தருமபுரி வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். மேற்கண்ட குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.இதன்பேரில் கீழ்கண்ட 8 நபர்களுக்கு மாவட்ட வன அலுவலர், தருமபுரி அவர்களின் உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் என கூறப்படும் மேல்பூரிக்கல் துரை,தொப்பூர் பாக்கியராஜ்,மேல்பூரிக்கல் தமிழ்செல்வன்,மேல்பைரிக்கல் பெரியசாமி,தம்மம்பட்டி சதீஷ்குமார்,வருது சித்தநாதன்,அதியமான் கோட்டை வீரசிம்மன்,அதியமான் கோட்டை ஜெய்சங்கர் ஆகிய 8 நபர்களிடமிருந்து
வன விலங்கினை வேட்டையாடிய
குற்றத்திற்காக இணக்க கட்டணம் ரூ. 5,55,000/- தருமபுரி வன அலுவலர், உத்தரவுபடி இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.

