விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
டில்லியில் போராடும் விவசாயிகள் மீது, துப்பாக்கி சூடு நடத்திய, மோடி ஒன்றிய அரசை கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் விலைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.இவர்கள் மீது ஒன்றிய அரசு துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.ரப்பர் குண்டு வீசுகின்றனர்.துப்பாக்கி சூட்டில் இளம் விவசாயி சுப்கரன்சிங் கொலை செய்யப்பட்டார்.இதனை கண்டித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும், ஒன்றிய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலசெயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா,எல்பிஎப்,மாவட்ட தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் சண்முகராஜா,ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஏஐடியுசி, மாவட்ட செயலாளர் கே.மணி, ஏஐசிசிடியு, மாவட்ட செயலாளர் சி.முருகன் எச்எம்எஸ், மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேசினர்.

