மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.
10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பணியை புறக்கணித்து இரண்டாவது நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்ததின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டாதாரி அல்லாத அலுவர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர்/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின்
அடிப்படையில் விதிதிருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம், செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வாட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர்
மேலாண்மைப்பிரிவில் 31.03.23 முதல் கலைக்கட்ப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுயற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈர்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிவக்குமார்,மாவட்ட துணைத்தலைவர் அன்பு ,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

